Welcome

Saturday, November 30, 2024

நம் தேசிய கொடியை ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பதன் காரணம் என்ன?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

நம் தேசிய கொடியை ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பதன் காரணம் என்ன?

நம் தேசிய கொடி மேலே பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் உள்ள மலர்கள் கீழே விழுவதை பார்த்து கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்கு ஒரு சோக சம்பவம் அடங்கி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த கொடி மேலே பட்டொளி வீசி பறக்க அதாவது நமக்கு சுதந்திரம் கிடைக்க எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்திருக்கிறது. அதாவது தங்கள் கணவர்களை இழந்துதான் இந்த சுதந்திரம் நமக்கு கிடைத்திருக்கிறது.

அதைத்தான் கொடியில் உள்ள மலர்கள் கீழே விழுந்து நமக்கு உணர்த்துகிறது.

இனி ஒவ்வொரு முறை கொடி ஏற்றத்தின்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால்…

இன்றும் நாம் எங்காவது செக்கிழுத்துக்கொண்டோ அல்லது அன்னியருக்கு சேவகம் பார்த்துக்கொண்டு அடிமை வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம்.

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment