Welcome

Sunday, December 8, 2024

பிறந்த குழந்தை ஏன் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருக்கிறது?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

பிறந்த குழந்தை ஏன் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருக்கிறது?

குழந்தை பிறந்த உடன் விழித்திருக்கும் நேரம் முழுவதும் பல நாட்கள் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருப்பதை பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்கு இப்படி அழுகிறது என்று கேட்டால் யாருக்கும் சொல்ல தெரியாது. காரணமும் தெரியாது.

சரி அப்படி எதற்குதான் பிறந்த குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது?

ஓவ்வொரு குழந்தையும் தன் தாயின் கருவறையில் இருக்கும்போது பத்து மாதங்களும் விழித்திருக்கும் நேரங்களில் தொடர்ச்சியாக தாயின் இதய துடிப்பை கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதில் மெய்மறந்துதான் தூங்கவும் செய்யும்.

இந்த பத்து மாதங்கள் அமைதியாக கேட்டு ரசித்த அந்த இதய துடிப்பு பிறந்த பிறந்த பின்னர் கேட்காமல் போவதாலும் மற்ற சத்தங்கள் தன் காதை தொல்லை பன்னுவதாலும் தொடர்ந்து அழுகிறது.

அதனால் அழுகின்ற குழந்தையை தூக்கி நம் நெஞ்சில் அனைத்து வைத்துக்கொள்ளும் போது பழைபடி மீண்டும் அந்த இதய துடிப்பு ஓசையை கேட்டு உணர்ந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் அழுகையை நிறுத்திவிடுகிறது.

என்ன நான் சொல்வது சரிதானே எம்குல பெற்றோர்களே…?

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment