Welcome

Wednesday, December 18, 2024

ஏன் தமிழர் உணவில் மட்டும் அறுசுவை?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

 

ஏன் தமிழர் உணவில் மட்டும் அறுசுவை? அறுசுவைகள் என்ன என்ன? அதன் பலன் என்ன? அது எந்த உணவில் இருக்கிறது?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தை கூட்டுவதுடன் உணர்ச்சியை கூட்டவும் குறைக்கவும் செய்யும் செரிமானத்தை தூண்டும்.

உணவு: மிளகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய், கடுகு.

கசப்பு: உடம்பில் உள்ள உதவாத கிருமிகளை அழித்து உடலுக்கு சக்தியை கூட்டும், சளியைக்கட்டுப்படுத்தும்.

உணவு: பாகற்காய், சுண்டக்காய், கோவைக்காய், வெந்தயம், வேப்பம்பூ, அதலக்காய். ஓமம்

இனிப்பு: உடல் தசையை வளர்க்கும் தன்மை கொண்டது. வாதத்தை  கூட்டும்.

உணவு: அரிசி, கோதுமை, கரும்பு, உருளை, பழங்கள், கருப்பட்டி.

புளிப்பு: இரத்த குழாயின் அழுக்கை நீக்க வல்லது. இரத்த சுத்திகரிப்பு.

உணவு: புளி, எலுமிச்சை, தயிர், மோர், மாங்காய், தக்காளி.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாமல் தடுக்க வல்லது. இரத்தம் உரைவதை தடுக்க வல்லது. இன்சுலின் சுரப்பை தூண்டும். கனையம் நன்கு செயல்படும்.

உணவு: பாக்கு, அத்தி, வாழைகாய், மாதுளை, மஞ்சள், கொய்யா.வாழைப்பூ.

உவர்ப்பு(உப்பு) : ஞாபக சக்தியை அதிகரிக்கும். உப்பு அதிகரித்தால் உடல் கூடும். வீக்கம் வரும்.

உணவு: வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய்.

தமிழர்களின் பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகள் மட்டுமல்ல சமையலும் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.                              

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.          

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

 

 

 



No comments:

Post a Comment