Welcome

Friday, December 20, 2024

சாம்பிராணி தூபம் போடுவதன் இரகசியம் என்ன?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

சாம்பிராணி தூபம் போடுவதன் இரகசியம் என்ன?

ஆன்மீகமா? மூடநம்பிக்கையா?

நம் வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்கள் தினமும் மாலையில் குளித்துவிட்டு விளக்கேற்றி சாம்பிராணி தூபமிடுவார்கள்.

கேட்டால் வீட்டில் உள்ள பீடைகள் தரித்திரம் போகும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் செல்வம் பெருகும் என்று சொல்வார்கள்.

அதுமட்டும்தான் காரணமா என்றால் இல்லை. பிறகு எதுதான் உண்மை காரணம்?

சாம்பிராணி என்பது ஒரு மூலிகை மரத்தின் பிசின் ஆகும். அதை நெருப்பில் இடும்போது வரும் புகையால் வீடு நறுமணம் பெரும். வீட்டில் உள்ள கெட்ட வாடை அகலும்.

எதிர்மறை ஆற்றல் விலக்கி நேர்மறை ஆற்றல் பெருகும். சுவாச கோளாறு நீங்கி மூக்கடைப்பு விலகும்.சளிப்பிரச்சனைகள் தீரும்.

வீட்டில் உள்ள தேள், பல்லி, பூரான், எட்டுகால் பூச்சி போன்ற ஜந்துக்கள் தொல்லை சாம்பிராணி போடும் வீட்டில் இருக்காது. இருந்தாலும் ஓடிவிடும். 

அதனால்தான் நம் அனைத்து வழிபாட்டு முறைகளிலும் கூட சாம்பிராணி தூபம் போடும் வழக்கத்தை நம் மூதாதையர்கள் கடைபிடித்தார்கள். கம்யூட்டர் சாம்பிராணியில் அந்த பலன் கிடைக்காது.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் நன்மைக்கே, ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 


No comments:

Post a Comment